TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு..!

அனுமதியின்றி பொதுமக்களுக்கு தவேக கட்சியின் துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்ததற்காக சென்னை டி. நகரில் தவேக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அண்ணாபல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்று தவேக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார். மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தனக்கு சொல்ல முடியாத துயரத்தைக் கொடுத்ததாகவும் இன்று காலை தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்தக் கையெழுத்து அறிக்கையை சென்னை, அண்ணாநகரில் உள்ள தனியார் மாலின் முன்பு நின்று பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர் தவேக பெண் நிர்வாகிகள். இதனால், புஸ்ஸி ஆனந்த் போலவே அவர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
’நாங்கள் மறியல் செய்யவில்லை, பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை. நோட்டீஸ் கொடுத்ததற்கு எதற்கு கைது?’ என தவேக பெண் நிர்வாகிகள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மட்டுமல்லாது தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. விஜய், ஆளுநர் சந்திப்பு முடிந்ததும் இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post