தனது ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி 2 கோடி ரூபாய் கேட்டு பிரபல சின்னத்திரை நடிகை மிரட்டுவதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் திலக் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வதி என்ற 61 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கன்னட சின்னத்திரை நடிகையான ஆஷா ஜோஸ் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இதற்கிடையே பார்வதி வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருவது பற்றி நடிகை ஆஷா ஜோஸுக்கு தெரியவந்தது.
ஆபாச வீடியோக்கள்
இதனிடையே பார்வதியின் செல்போனில் அவரது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருப்பதை அறிந்த நடிகை ஆஷா ஜோஸ், அவற்றை நைசாக தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனக்கு பணப் பிரச்சனைகள் இருப்பதாகவும், உங்களது கணவரிடம் இருந்து பணம் வாங்கி கொடுங்கள் எனவும் நடிகை ஆஷா, பார்வதியிடம் கேட்டனர். நிலையில், அவர் ஆஷாவுக்கு பணம் தர மறுத்துள்ளார்.
இதன் பின் தனது செல்போனில் உள்ள பார்வதியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அவரிடம் காட்டி 2 கோடி ரூபாய் பணம் தரவில்லை புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என நடிகை ஆஷா, பார்வதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆஷாவுக்கு சம்மன்..
இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி, தனது ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் தனது குடும்ப மானம் பறிபோய் விடுமே என்ற அச்சத்தில் திலக் நகர் காவல் நிலையத்தில் நடிகை ஆஷா ஜோஸ் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், மிரட்டல், தனியுரிமை தகவல்களை திருடுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தினர். வருகின்றனர். இது குறித்து விசாரிப்பதற்காக நடிகை ஆஷாவுக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
கன்னட தொலைக்காட்சிகளில் வெளியான பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ஆஷா ஜோஸ். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா பிளானட் அழகி போட்டியிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..
