என்னால் முடியல.. விட்ரு டா.. கதறிய கள்ளக்காதலி.. உயிருக்கு ஆபத்தான நிலையில்.. கொடூர சம்பவம்..!

போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது வெண்ணிலா என்பவர், தனது டிரைவரால் வீடியோக்களைப் பயன்படுத்தினார். அச்சுறுத்தப்பட்டதால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அச்சுறுத்திய டிரைவர் சிராஜுதீன் என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து, ஊத்தங்கரை சிறையில் அடைத்துள்ளனர். குள்ளூரைச் சேர்ந்த வெண்ணிலா, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரைத் திருமணம் செய்து, இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பெற்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரின் உடல்நலக்குறைவால் இறந்ததையடுத்து, வெண்ணிலா தனது குழந்தைகளுடன் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளூரில் குடியேறினார். அங்கு 'லட்சுமி ஹைடெக்' என்ற பெயரில் பியூட்டி பார்லரைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 9 ஆண்டுகளுக்கு முன்பு, ராசி நகர் பகுதியைச் சேர்ந்த சம்ரா என்பவரை பியூட்டி பார்லரில் உதவியாளராகப் பணியமர்த்திய வெண்ணிலா, 2 ஆண்டுகளுக்கு முன்பு சம்ராவின் கணவர் சிராஜுதீன் என்பவரை தனது காரின் டிரைவராகச் சேர்த்துக்கொண்டார். அவருக்கு அந்தப் பகுதியிலேயே வாடகை வீடு ஏற்பாடு செய்து, குடும்பத்துடன் தங்க வைத்தார். பியூட்டி பார்லர் தொடர்பான பணிகளுக்காக வெண்ணிலாவும் சிராஜுதீனும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது உருவான பழக்கம், படிப்படியாக தொடுதல்களுடன் செழிப்பாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில், இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்தனர். கணவனை இழந்து தனிமையில் இருந்த வெண்ணிலை சிராஜ் தனது சூட்டை தனித்துக்கொண்டார்.மட்டுமில்லாமல், இருவரும் எப்பொழுதும் வெளியூர்களுக்கு சென்று அறைகளைப் பதிவு செய்து, மது அருந்தி, தனிமையை கொண்டாடியுள்ளனர்.
இதைப் பயன்படுத்தி, சிராஜுதீன் தனது மொபைலில் வெண்ணிலாவின் அந்தரங்க காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னாடி வேண்டாம்.. இதற்கிடையே, 8 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக பழக்கமான உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாரி கிருஷ்ணன் என்பவருடன், குழந்தைகளின் சம்மதத்துடன் வெண்ணிலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மேலும், சிராஜுதீனிடமும் நமது உறவு, பழக்கம் திருமணத்திற்கு பின்னாடி வேண்டாம் என கூறியுள்ளார். இதன்பிறகு, சிராஜுதீனுடனான உறவைப் படிப்படியாகக் குறைத்த வெண்ணிலா, அவரை டிரைவர் பணியில் மட்டுமே கவனம் செலுத்தச் சொன்னார். இதனால் மனமுடைந்த சிராஜுதீன், ஏக்கத்தில் தவித்தார், பழிவாங்கும் மனோபாவத்துடன் செயல்பட்டார். பியூட்டி பார்லரில் வேலை செய்யும் உஷாவிடம், வீடியோக்களைக் காட்டி "உங்க முதலாளியோட கேரக்டர் சரியில்லை, இதைப் பாரு" என்று அவதூறு பேசினார். அதிர்ச்சி அடைந்த உஷா, இதைத் தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். இதை அறிந்த வெண்ணிலா, உடனடியாக சிராஜுதீனையும் அவரது மனைவி சம்ராவையும் அழைத்து, "இனிமே வேலைக்கு வராதீங்க" என்று கடுமையாக எச்சரித்து, இருவரையும் வேலையில் இருந்து நீக்கினார். என்னால் முடியல.. விட்ரு டா.. இதற்குப் பின் சில நாட்களில், சிராஜுதீன் வெண்ணிலாவைத் தொடர்ந்து போன் செய்து, "என்னிடம் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்" என்று மிரட்டினார். பயந்து போன வெண்ணிலா, என்னால் முடியல.. விட்ரு டா.. என கெஞ்சி கதறியுள்ளார். மேலும், பலரைத் தொடர்பு கொண்டு சிராஜுதீனை அழைத்துப் பேசி, பிரச்சினையைத் தீர்க்க முயன்றார்.ஆனால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில்.. இதன் எதிரொலியாக, நவம்பர் 4-ஆம் தேதி காலை, வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உட்கொண்டு வெண்ணிலா தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் மருத்துவமனைக்கு சென்று வெண்ணிலாவரிடம் விசாரணை நடத்தினர். அதிர்ச்சியடைந்த போலீசார், சிராஜுதீனைத் தேடி வந்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சம்பந்தமாக மேலும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்தச் சம்பவம், போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு, அச்சுறுத்தல் மற்றும் சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடு குறித்து அக்கறை காட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்க ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post