“கரும்பு காட்டில் உல்லாசம்..” உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை.. துடிதுடித்து பிரிந்த உயிர்!

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், அதானி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த குமார் கல்லப்பா (36) கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஜாதாவுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். அதானி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த குமார் கல்லப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். சுஜாதா சிறிய அளவில் வேலை செய்து சொத்து சேர்த்து வைத்திருந்தார். அவர் குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். ஆனால், குமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் சுஜாதா அடிக்கடி குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "என் சொத்துக்காகத்தான் என்னிடம் பழகுறியா?" என்று கேட்டு, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 5-ஆம் தேதி, வழக்கம்போல இருவரும் தனிமையில் இருக்க கருப்பு (கரும்பு?) தோட்டத்திற்குச் சென்றனர். உடலுறவின் போது சுஜாதா மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். "அடுத்த முறை உடலுறவு கொள்ளும் போது நான் உன்னுடைய மனைவியாக இருக்க வேண்டும்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், சுஜாதாவை அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து, அந்த கருப்பு தோட்டத்தின் உரிமையாளர் சுஜாதாவின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுஜாதாவின் தாயார் லீலாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அதானி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜாதாவுடன் உறவில் இருந்த குமார் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தேடிய போலீசார் குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் குமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சுஜாதாவை தான் கொலை செய்ததாகவும், திருமண நெருக்கடி மற்றும் வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்ததாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் அதானி கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post