சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான செய்தி பரவி வருகிறது. பள்ளிக்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்த ஆசிரியை ஒருவர், திடீரென ஆட்டோவிலேயே மயக்கமடைந்துள்ளார்.
ஆசிரியை மயங்கி விழுந்ததைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்குத் தூக்கிச் சென்றார். அங்கு மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட ஓட்டுநர், சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அந்த உடலுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கொடூரமான செயலுக்குப் பிறகு, ஆச்சரியப்படும் விதமாக அந்தப் பெண்ணுக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியுள்ளது. தான் இறக்கவில்லை என்றும், தனக்கு ஏதோ நேர்ந்துள்ளது என்றும் உணராத அந்தப் பெண், தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் எதுவுமே நடக்காது போல, அந்தப் பெண்ணை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவரிடம், உங்கள் மனைவி வழியில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், தான் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
உண்மையை அறியாத அந்தப் பெண்ணின் கணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது மனைவியைக் காப்பாற்றி, வீட்டிற்கு அழைத்து வந்ததற்காக அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார். தனது மனைவியை அவர் தான் “மறுபிறவி” எடுக்க வைத்ததாக எண்ணி நெகிழ்ந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த முழுமையான உண்மைத் தன்மை மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் சமூகத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
