வயகாரா வேண்டாம்.. இது போதும்.. உடலுறவின் பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்.. ரகசியம் உடைத்த மருத்துவர்...

பாலியல் வாழ்க்கையில் ஆண்கள் பெரும்பாலும் தவறாக நினைக்கும் பல விஷயங்கள் உண்மையில் பெண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தையும், விருப்பமின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று புகழ்பெற்ற பாலியல் மருத்துவர் அகில டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“வயகாரா போன்ற மருந்துகள் பயன்படுத்துவதை விட, உங்கள் துணை உணர்வுகளைப் புரிந்துகொள்வதே மிக முக்கியம்” என்று அவர் கூறினார். டாக்டர் அகிலா, தமிழ்நாட்டின் முன்னணி பாலியல் மற்றும் திருமண ஆலோசனை நிபுணர். அவரது கிளினிக்கில் தம்பதிகள் ஆலோசனை பெற்றுள்ளனர். அவர் உடைத்த ரகசியங்கள் பல ஆண்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது. பெண்களுக்கு உடலுறவின்போது பிடிக்காத முக்கிய விஷயங்கள்:
1. நேரடியாக உடலுறவுக்கு செல்ல முயற்சிப்பது “பெரும்பாலான ஆண்கள் முத்தம் கொடுப்பது, அணைப்பது, முன்விளையாட்டு ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு நேராக உடலுறவுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். பெண்களின் உடல் 15-20 நிமிடங்கள் முன்விளையாட்டுக்கு தேவைப்படுகிறது. அது இல்லாமல் உடலுறவு அவர்களுக்கு வலியையும், அசௌகரியத்தையும் தரும்” என்றார் டாக்டர் அகிலா.
2. ‘கொஞ்சம் பொறுமையா இரு’ என்று சொல்வது பெண்கள் உடலுறவின்போது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகின்றனர். “நான் இப்படித்தான், நீ பொறுமையா இரு” என்று ஆண்கள் சொல்வது பெண்களை மிகவும் வருத்தப்படுத்துகிறது. இது அவர்களை ‘இயந்திரம்’ போல உணர வைக்கிறது என்று மருத்துவர் தெரிவித்தார். அவர்கள் அசவுகரியமாக உணரும் போது அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
3. உடலுறவுக்குப் பிறகு உடனடியாக தூங்கச் செல்வது உடலுறவு முடிந்த உடனேயே புரண்டு தூங்குவது அல்லது மொபைல் பார்ப்பது பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும். அடுத்தமுறை, அழைத்தாலும் முகம் கொடுத்து கூட பேச தயங்குவார்கள். ஒவ்வொரு முறை உறவு முடிந்த பிறகு, அவர்களை “அணைத்துக்கொண்டு பேசுவது, அன்பு காட்டுவது, ஒருவரை ஒருவர் பாராட்டுவது, அவருக்கு மிகவும் பிடித்த உணவு, உடை, அழகு சாதனம் அது ஐந்து ரூபாய் ஸ்டிக்கர் போட்டாக கூட இருக்கலாம் இப்படி எதையாவது வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்வது அவர்களின் நல்ல நினைவுகளில் உடனடியாக சேர்ந்துவிடும் – இவை பெண்களுக்கு மிக முக்கியம்.
4. எப்போதும் ஒரே மாதிரியான நிலைகளில் உடலுறவு "பெண்கள் புதுமையை விரும்புகின்றனர். எப்போதும் மிஷனரி பொசிஷன் மட்டும் செய்வது அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. 5. உடலுறவின்போது அழுக்கான பேச்சு அல்லது அசிங்கமான வார்த்தைகள் சில ஆண்கள் உடலுறவின்போது அசிங்கமான அல்லது அழுக்கான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இது பல பெண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. “அன்பான, மென்மையான பேச்சு மற்றும் பாராட்டு வார்த்தைகளே பெண்களை அதிகம் உற்சாகப்படுத்தும்” என்று டாக்டர் அகிலா விளக்கினார்.
டாக்டர் அகிலாவின் அறிவுரை: “வயகாரா அல்லது பிற செயற்கை மருந்துகளை நம்புவதற்கு பதிலாக, உங்கள் மனைவியின் உடலைப் புரிந்துகொள்ளுங்கள். அவளின் விருப்பங்களைக் கேளுங்கள். முன்விளையாட்டுக்கு போதுமான நேரம் கொடுங்கள். உடலுறவுக்குப் பிறகு அன்பை வெளிப்படுத்துங்கள். இவை மட்டுமே உங்கள் திருமண உறவை இனிமையாக்கும்.
பெண்களின் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. அவற்றை மதித்தால், உடலுறவு இருவருக்கும் இன்பமாக அமையும்.” இந்தத் தகவல்கள் பல தம்பதிகளின் உறவை மேம்படுத்த உதவும் என்று டாக்டர் அகிலா நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பு: இந்தச் செய்தி பொதுமக்களின் பாலியல் கல்விக்காக மட்டுமே. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.

Post a Comment

Previous Post Next Post