பெங்களூரின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த 36 வயது ஹரிணி. அழகு, அறிவு, குடும்பம் – எல்லாம் இருந்தும், தன் வாழ்க்கையைத் தானே அழித்துக்கொண்ட ஒரு பெண். அவளுக்கு 41 வயது கணவர் தேசகௌடா. இரண்டு அழகான பிள்ளைகள். அவர் ஒரு விவசாயி. வீட்டில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பம். ஆனால் ஹரிணிக்கு அது போதவில்லை.
“நான் ரொம்ப அழகா இருக்கேன்... என் புருஷன் வழுக்கை, கருப்பு, மாடல் போல உடல் வாகு இல்லை” என்ற எண்ணம் அவளை உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடைந்தது. குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, தனிமையில் மூழ்கினாள். சண்டைகள் அதிகமாயின. குடும்பம் பிளவுபடத் தொடங்கியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதே கெங்கேரி பகுதியில் ஒரு ஊர் திருவிழா. குடும்பத்தோடு வந்த ஹரிணி, அங்கே 25 வயது யஷை (யஷஸ்) சந்தித்தாள். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன். கூட்டத்தில் பார்வைகள் மோதின. “நீங்க எந்த ஏரியா?” என்ற உரையாடல் தொடங்கியது. பொன் நம்பர்கள் பரிமாறப்பட்டனர்.
அன்று தொடங்கியது நட்பு. மணிக்கணக்கில் போன் பேச்சு, வீடியோ கால், சாட்டிங்... நாட்கள் செல்லச் செல்ல அது காதலாக மாறியது. ஒரு மாதத்திற்குள் இருவரும் பெங்களூரில் உள்ள OYO ஹோட்டல் அறையில் சந்தித்தனர்.
மாதத்துக்கு மூன்று முறை அப்படி ரகசிய சந்திப்புகள். தேசகௌடா வெளியூர் வேலைக்குப் போகும் நாட்களில், ஹரிணி “எஸ்எஸ் வரேன்” என்று சொல்லி வீட்டை விட்டுப் புறப்படுவாள்.
ஒரு நாள் தேசகௌடாவுக்கு சந்தேகம் வந்தது. மனைவியின் போனைப் பார்த்தார். சாட்டிங், புகைப்படங்கள், ரூம் புக்கிங் விவரங்கள் – எல்லாம் தெரிந்தது. கோபத்துடன் போனைப் பிடுங்கினார். “இனிமேல் அவன் கூட பேசக் கூடாது” என்று ஹவுஸ் அரெஸ்ட் செய்தார். ஒரு மாதம் முழுக்க வீட்டுக்குள் தங்கினாள் ஹரிணி.
ஆனால் அந்த ஒரு மாதம் யஷுக்கு நரகமாக இருந்தது. “ஹரிணி எனக்குக் கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்கக் கூடாது, அவள் என் மனைவி..” என்ற எண்ணம் அவனைச் சைக்கோவாக்கியது. அவளைத் தன் கூட அழைத்துச் செல்லத் திட்டமிட்டான். வராவிட்டால்... கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தான்.
ஒரு மாதத்துக்குப் பிறகு ஹரிணி தேசகௌடாவிடம் சத்தியம் செய்தாள். "இனிமேல் நான் திருந்திடுவேன். பிள்ளைகள் மேல் சத்தியம். அந்தப் பையன் கூட பேச மாட்டேன்." போனைத் திரும்பக் கொடுத்தார் கணவர். ஆனால் போன் கிடைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் யஷுக்கு அழைத்தாள் ஹரிணி. "உன்னைப் பார்க்கணும். ரூம் புக் பண்ணு. வரேன்."
ஜூன் 6, 2025 அன்று இரவு. பூர்ணபிரஜ்ஞா ஹவுசிங் சொசைட்டி லேஅவுட்டில் உள்ள ஓயோ ஹோட்டல் அறை. ஆதார் கார்டு கொடுத்து ரூம் புக் செய்தான் யஷ். ஹரிணி வந்தாள். இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
உல்லாச உலகில் பறந்து கொண்டிருந்த போது “யஷ், இனிமேல் இது எல்லாம் வேண்டாம். நான் என் புருஷனுக்கு உண்மையா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன். பிள்ளைகள் இருக்காங்க. நம்ம வாழ்க்கை வேற. எனக்கு வயசும் அதிகம், நீயும் வேற கல்யாணம் பண்ணிக்கோ, நீ உன் வழி, நான் என் வழி.”
அந்த வார்த்தைகள் யஷைப் பைத்தியமாக்கின. “நீ என்னை விட்டுட்டு போக முடியாது. எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது!” என்றான். வாக்குவாதம் முற்றியது. பிறகு யஷ் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்தான்.
ஹரிணி டவலை மட்டும் கட்டியிருந்த நிலையில், அவள் முன்னால் நின்றான். 17 முறை வெட்டினான். கழுத்து, மார்பு, வயிறு, முதுகு – எங்கும் ரத்தம். ஹரிணி கீழே சுருண்டு விழுந்தாள். நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். யஷ் ரத்த கரைகளை கழுவிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.
எட்டு மணி நேரம் கழித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு ரத்த வாடை தெரிந்தது. கதவை உடைத்துப் பார்த்தபோது... கொடூரக் காட்சி. போலீஸ் வந்தது. ஆதார் கார்டு மூலம் யஷ் அடையாளம் காணப்பட்டது. சைபர் செல் உதவியுடன் அவன் போன் லோக கண்டுபிடிக்கப்பட்டு, அதே நாள் மாலை கைது செய்யப்பட்டான்.
விசாரணையில் யஷ் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். “அவள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்றாள். அதனால் கொன்றேன்” என்றான்.
தேசகௌடா வெளியூரில் இருந்து ஓடி வந்தார். மனைவியின் உடலைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டார். “நான் சொன்னேனே... அந்தப் பையன் கூட சேராதே என்று... இப்படி ஆயிட்டாளே!” என்று அழுதார்.
இன்று இரண்டு பிள்ளைகளும் தாயில்லாமல் தவிக்கின்றனர். ஒரு குடும்பம் நாசமானது. யஷ் சிறையில். ஹரிணி இல்லை.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
இல்லாத சுகத்தைத் தேடி, இருக்கும் அன்பை இழப்பது முட்டாள்தனம். கள்ள உறவுகள் ஒருபோதும் நல்ல முடிவில் முடியாது. திருந்த முயற்சி செய்தாலும், சூழ்நிலை உங்களை விடாது. குடும்பம், பிள்ளைகள், கணவன் – இவைதான் உண்மையான செல்வம்.
மக்களே, உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இல்லாததை நினைத்து இருப்பதை இழக்காதீர்கள். இல்லீகல் உறவுகள் ஆபத்து மட்டுமே தரும். திருந்துங்கள்... இப்போதே!
இந்தக் கொடூரச் சம்பவம் நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கை. விழிப்புணர்வோடு வாழ்வோம்.
