மதுபோதையில் 62 வயது முதியவருடன் வெறித்தனமான உடலுறவில் ஈடுபட்ட 25 வயது பெண்.. பிறகு?

உத்தரபிரதேசத்தின் ஒரு பரபரப்பான பேருந்து நிலையத்திற்கு அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் பெயர் சீமா. வயது 25. அழகான தோற்றம். பெற்றோர்கள் இல்லை. அனாதை. “எனக்கு மூன்று வேளை சோறு போட்டால் போதும். நீங்கள் சொன்னதெல்லாம் கேட்கிறேன்” என்று அந்தப் பகுதியில் வந்த ரமேஷ் திவாரி என்ற 62 வயது முதியவரிடம் கண்ணீருடன் கூறினார். ரமேஷ் திவாரியின் இதயம் அந்த அழகில் உருகியது. அவருக்கு மகன் மருமகள் சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டனர். வீட்டில் தனியாக மூன்று வயது பேரன் ராகுலுடன் தவித்துக்கொண்டிருந்தார். “வீட்டு வேலைக்கு வருகிறாயா? குழந்தையைப் பார்த்துக்கொள். நானும் உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்” என்று சீமாவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். முதலில் எல்லாம் சரியாகவே இருந்தது. சீமா வீட்டு வேலைகளைச் செய்தாள். ராகுலை அன்புடன் பார்த்துக்கொண்டாள். ஆனால் ரமேஷ் திவாரியின் சபலம் அவரை விட்டபாடில்லை.
அவரது 62 வயதானாலும், அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளைத் தொட ஆரம்பித்தார். படிப்படியாக இருவரும் தவறான உறவில் சிக்கினர். சீமாவுக்கு வேறு எந்தப் பாதுகாப்பான இடமும் இல்லை. “இங்கேயாவது உணவும் தங்குமிடம் கிடைக்கிறது” என்ற எண்ணத்தில் அவரது எல்லா ஆசைகளுக்கும் இணங்கினாள். ஆனால் ரமேஷ் திவாரி ஒரு விஷயத்தை சீமாவுக்குத் தெரியாமல் செய்திருந்தார். குழந்தை ராகுலின் நடமாட்டத்தை கண்காணிக்க வீட்டின் படுக்கையறை மற்றும் ஹால் பகுதியில் சிசிடிவி கேமராக்களை ரகசியமாகப் பொருத்தியிருந்தார். அந்த கேமராக்கள் அவர்களின் தனிப்பட்ட உறவையும், அதன் கொடூர முடிவையும் பதிவு செய்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு வந்து பார்த்தபோது, படுக்கையில் ஆடையின்றி, உடல் அழுகிய நிலையில் ராமேஷ் திவாரியின் சடலம் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையின் போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது தெரியவந்தது. அதில் பதிவாகியிருந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசி நாள் இரவு... ராமேஷ் திவாரி சீமாவுடன் முரட்டுத்தனமான உடலுறவில் ஈடுபட்டிருந்தார். அதற்காக ஐந்து மாத்திரைகளை உட்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவரது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்தார். எழுந்து நின்ற சீமா பயந்து போய் அவரைத் தொட்டுப் பார்த்தாள். மூச்சு நின்றுவிட்டது. உயிருடன் இருக்கிறாரா என்று சோதித்துவிட்டு, உடனடியாக உடைகளை மாற்றிக்கொண்டு, தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு, மூன்று வயது ராகுலைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அன்று ஒரு வாரமாக சீமா ராகுலுடன் அந்த பேருந்து நிலையத்திலேயே தங்கியிருந்தாள். வேறு எங்கும் போக இடம் இல்லை என்று அங்கேயே காலம் கழித்தாள். போலீசார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் உண்மை வெளியானது. உடனடியாக சீமாவைத் தேடும் பணியில் இறங்கினர். பேருந்து நிலையத்தில் மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த சீமாவை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் சீமா அளித்த வாக்குமூலம்: “அவர் எப்போதும் என்னுடன் உல்லாசமாக இருக்கும்போது மாத்திரை சாப்பிடுவார். அன்று மது அருந்தினார், அவர் ஐந்து மாத்திரைகள் சாப்பிட்டார். மது போதையில் எந்த மாத்திரையும் சாப்பிடக்கூடாது எனக் கூறினேன்.
சிசிடிவி காட்சிகளும் அவள் கூறியதை உறுதிப்படுத்தின. தற்போது சீமா போலீசார் காவலில் உள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராகுல் சிறுவர் நல அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனாதைப் பெண்களின் பாதுகாப்பு, வயதானவர்களின் தவறான ஆசைகள், வீட்டில் உள்ள ரகசிய கேமராக்கள் – பல கேள்விகளை எழுப்பியுள்ளது இந்த அதிர்ச்சி சம்பவம்.

Post a Comment

Previous Post Next Post