தனது சொந்த இடத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 42 வயது பெண்ணை, அவரது மகளைத் திருமணம் செய்து கொடுக்கக் கோரி மிரட்டிய 27 வயது இளைஞன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் நடைபெற்றது. அங்கு அழகு நிலையம் நடத்தி வந்த அஞ்சலி முகர்ஜி (42) தனது கடையின் மேல் தளத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இடத்தில் ஜிம் தொடங்க ராகுல் சென் (27) என்பவர் முன் வந்தார். இதனால், அஞ்சலிக்கும் ராஹூலுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு தகாத உறவாக மாறியது.
அஞ்சலி ஏற்கனவே திருமணமாகி, 20 வயது பிரியா முகர்ஜி என்ற மகளுக்கு தாயாக இருக்கிறார். தனது கணவர் வெளியூரில் இருந்த நேரத்தில், ராகுலுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ராகுல் ஒரு நாள் அஞ்சலியிடம் ஒரு அழகிய பொம்மையைப் பரிசளித்து, “இதை உங்கள் பாத்ரூமில் வைத்துக்கொள்ளுங்கள், வாசனை ஸ்ப்ரே செய்யும்” என்று கூறினார். ஆனால் அந்தப் பொம்மை உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமரா மூலம் அஞ்சலியின் மகள் ப்ரியா குளிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட வீடியோக்களை ராகுல் பதிவு செய்துள்ளார்.
வீடியோவை ஆதாரமாக வைத்து, “உங்கள் மகளை திருமணம் செய்து கொடுங்கள். இல்லையென்றால் வீடியோவை பொதுவில் வெளியிடுவேன்” என அஞ்சலியை மிரட்டியுள்ளார். மேலும், “திருமணம் ஆன பிறகு நீங்களும் என்ன உல்லாசமாக இருக்கலாம், யாருக்கும் சந்தேகம் வராது” எனவும் கூறியதாகத் தெரிகிறது.
இதை ஏற்க மறுத்த அஞ்சலி, “உன்னைப் போன்ற கொடூரனுக்கு என் மக்களைத் தரமாட்டேன்” என மறுத்தபோது, ராகுல் கடும் கோபமடைந்து அஞ்சலியைத் தாக்கியுள்ளார். தாக்குதலில் அஞ்சலி மயக்கமடைந்தார். ஈச்சம்பவம் அஞ்சலியின் வீட்டில் நடைபெற்றது.
உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அஞ்சலி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகி இருப்பதாக மருத்துவர்கள்.
மகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முழு உண்மைகளும் வெளியாகின. இதையடுத்து ராகுல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொல்கத்தா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் அதிகாரி: “இது பாலியல் சுரண்டல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றார்.
இந்த சம்பவம், தாய்மார்களின் தவறான உறவுகள் எப்படி குடும்பத்தையே அழிக்கும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
