சென்னையின் பரபரப்பான வாழ்க்கையில், ஏர்போர்ட்டில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்த ஜெயந்தன் என்ற இளைஞன், தன் அக்கா ஜெயாவின் வீட்டில் தங்கி அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.
விழுப்புரம் சொந்த ஊரைச் சேர்ந்த அவன், காலை 8 மணிக்கு வேலைக்குப் போய் இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் ஒழுங்கான இளைஞன். அவனது வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
2020-ம் ஆண்டு, அவனது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. தாம்பரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 38 வயது விலைமாது தொழில் செய்யும் பெண்ணை அறிமுகம் செய்து கொண்டான்.
அவள் புதுக்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவள். ஆரம்பத்தில் பணம் கொடுத்து அவளுடன் பழகிய ஜெயந்தன், படிப்படியாக அவள்மீது ஆழமான பற்று கொண்டான்.
“நான் உன்னை உண்மையாகக் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தலாம்” என்று அவளிடம் உணர்ச்சிப் பொங்கக் கூறினான்.
பாக்கியலட்சுமிக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும், விலைமாதுவான என்னை காதலிக்கிறாயா..? எனக்கு மகிழ்ச்சி என அவள் அதை ஏற்றுக் கொண்டாள். இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வாடகை வீடு எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஜெயந்தன் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான்.
ஆனால், பாக்கியலட்சுமிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. பல ஆண்டுகளாக புதிய நபர்களுடன் உல்லாசம், அதற்காக கிடைத்த பணம், பழகிய பழைய வாழ்க்கை முறை அவளை விட்டு அகலவில்லை. அவளுடைய வாழ்க்கை தேவை, உடல் தேவை இரண்டுமே ஜெயந்தனால் திருப்திபடுத்தப்படவில்லை.வாழ்க்கை முறை
இதனால், அடிக்கடி சண்டைகள், வாக்குவாதங்கள் அதிகரித்தன.ஒரு நாளைக்கு ஐந்து பேர் என்றாலும் ஒரே நாளில் நான் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் சம்பாதிப்பேன்.. இந்த கல்யாண வாழ்க்கை எல்லாம் எனக்கு வேண்டாம் என ருசி கண்ட பூனையாக இறுதியில் அவள் ஜெயந்தனை விட்டு புதுக்கோட்டைக்கு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
அங்கிருந்து கொண்டு மீண்டும் தன்னுடைய வேலையை தொடங்கி பணம் சம்பாதிக்க தொடங்கினால். ஜெயந்தன் முற்றிலும் உடைந்து போனான். தினமும் அவளுக்கு அழைப்பு விடுத்து, தன் காதலை நினைவூட்டினான். ஆனால் பாக்கியலட்சுமி அவனைத் தவிர்த்தாள். இந்த நிலையில் 2023 மார்ச் 18-ம் தேதி, ஜெயந்தன் தன் அக்காவிடம் “விழுப்புரம் போகிறேன்” என்று பொய் சொல்லிவிட்டு, பாக்கியலட்சுமியை சந்திக்க புதுக்கோட்டைக்குச் சென்றான்.
அங்கு அவன் அவளை மீண்டும் சந்தித்து, தன் காதலை வலியுறுத்தினான். ஆனால் பாக்கியலட்சுமி அதை ஏற்க மறுத்தாள். சண்டை முற்றியது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்த பாக்கியலட்சுமி, அந்த இடத்திலேயே ஜெயந்தனைத் தாக்கினாள். அவளுக்கு உதவியாக அங்கிருந்த தன் நெருங்கிய நண்பன் சங்கரும் சேர்ந்து கொண்டான். சம்பவம் கொடூரமாக முடிந்தது.
பின்னர் இருவரும் சேர்ந்து உடலை மறைக்க முயன்றனர். உடலை கண்டம் துண்டமாக பிரித்தனர். அந்த இரவே சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து உடலின் ஒரு பகுதியை கோவளம் கடற்கரை அருகே புதைத்தாள்.
மீதமிருந்த பகுதிகளை சூட்கேஸில் வைத்து, வேல்முருகன் தனது கஸ்டமரின் உதவியுடன் கோயில் தெப்பக்குளத்தில் மறைந்தார். மணம் வீசாமல் இருக்க பினாயில் ஊற்றுவது, ப்ளீசிங் பவுடர் கொட்டி ஒப்பேத்துவது போன்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாள்.
ஆனால், ஜெயந்தன் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அக்கா ஜெயா போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி, போன் லொகேஷன், அழைப்பு விவரங்கள் ஆகியவற்றின் மூலம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இறுதியில் பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரித்தபோது, முழு உண்மையும் வெளியானது. சங்கர் முதலில் தலைமறைவானாலும் பின்னர் கைது செய்யப்பட்டார். வேல்முருகனும் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் 2023-ல் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு இளைஞன் தன் காதலை நம்பி எடுத்த முடிவு, எப்படி கொடூரமான முடிவில் போய் முடிந்தது என்பதை இது காட்டுகிறது.
Tags:
Crime
