தமிழகத்தில் சமீப காலங்களாக போதைப் பழக்கமும், புழக்கமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், பள்ளிச் சீருடையுடன் மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
