கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது இளம் மெடிக்கல் மாணவி, நண்பர்களுடன் தியேட்டருக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியது, அவளை ஏமாற்றி அப்பார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச் சென்ற மூன்று இளைஞர்கள், அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, இரண்டு நாட்கள் தொடர்ந்து பாலியல் கூட்டு துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷ்ரம்பாக் காவல் நிலையத்தினர் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
சம்பவ விவரங்கள்: ஏமாற்று திட்டத்தின் கொடூர முடிவு
இரவு 10 மணிக்கு, சாங்கிலி அருகே உள்ள மெடிக்கல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் இளம் பெண், தனது இரு சகமாணவர்களான புனேவைச் சேர்ந்தவர் மற்றும் சோலாப்புரைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து படம் பார்க்க திட்டமிட்டிருந்தார்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், படிப்புக்காக முழு குடும்பத்தினரும் மகாராஷ்டிராவில் தங்கியுள்ளது.ஆனால், இது ஒரு வக்கிர திட்டமாக மாறியது. வீட்டிற்கு காரில் வந்த மூன்று இளைஞர்களும், "தியேட்டருக்கு போகலாம்" என்று அழைத்துச் செல்ல, நேரடியாக தியேட்டருக்கு இல்லாமல், வான்லெஸ்வாடி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
"படத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி சாப்பிட்டு போகலாம்" என்று நைசாகப் பேசி நம்ப வைத்தனர். அங்கு, போதை மருந்து கலந்த ஜூஸை அவருக்குக் கொடுத்து அதன் பிறகு மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து, இருட்டறையில் அடைத்து வைத்தனர்.
மூன்று பேரும் மாறி மாறி அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்த இளம் பெண், தன்னை நிர்வாணமாகக் கண்டு கதறி அழுதார். "உங்களை நம்பி வந்தேன், இப்படி செஞ்சிட்டீங்களே" என்று கெஞ்சினார்.
ஆனால், குற்றவாளிகள் மதுபானத்தை வாயில் ஊற்றி மீண்டும் மயக்கி, கைகால்களை கட்டி சித்திரவதை செய்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த கொடுமை நடந்தது. "ப்ளீஸ் விடுங்கள், வீட்டில் என்னைத் தேடுவார்கள்" என்று அவர் அழுதபோது, "சொன்னால் உன் பெற்றோருக்கு காரை ஏற்றி கொல்வோம்" என்று மிரட்டினார். துரத்தினர்.
பெற்றோரின் அதிர்ச்சி: காணாமல் போன மகளின் வருகை
இளம் பெண் வீட்டுக்கு திரும்பாததால், இரவு 10 மணி ஆனதும் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். சுவிச் ஆஃப் ஆக இருந்ததால் கவலை அதிகரித்தது. மகளின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நாங்கள் படத்துக்கு போகவில்லை, அவளைப் பார்க்கவும் இல்லை" என்று சொன்னார்கள்.
இதனால் பதறிய பெற்றோர், பல இடங்களில் தேடி, செல்போனை அழைத்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.உடனடியாக விஷ்ரம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் சிக்னலை டிரைஸ் செய்து தேடினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கிழிந்த உடையுடன் வீட்டுக்குத் திரும்பிய மக்களைப் பார்த்து பெற்றோர் முதலில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
ஆனால், அவள் சொன்ன கொடூர சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மகள் போலீசிடம் புகார் அளித்தார்.
போலீஸ் நடவடிக்கை: கைது மற்றும் விசாரணை
மாணவியின் புகாரின் அடிப்படையில், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். அவள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், புனேவைச் சேர்ந்த சகமாணவர், சோலாப்பூரைச் சேர்ந்த சகமாணவர், சாங்கிலி நண்பர் ஆகிய மூவரையும் மே 22 அன்று இரவு கைது செய்தனர்.
அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்ற போலீஸ், அங்கு சிசிடிவி இல்லாததால், அருகிலுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு காரின் சந்தேக நீதானம் கிடைத்தது, ஆனால் நம்பர் தெளிவாக இல்லை. இருப்பினும், மாணவியின் விவரங்களால் குற்றவாளிகள் சிக்கினர்.
பாரதிய நியாய சஞ்சிதா (BNS) பிரிவுகளின் கீழ் கூட்டு பாலியல் கொடுமை, போதை அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 23 அன்று சாங்கிலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 27 வரை காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது.இந்தச் சம்பவம், மாணவர்கள் இடையே நட்பு என்ற பெயரில் நடக்கும் ஏமாற்றங்களின் ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. பெற்றோரும், போலீஸும் விரைந்து செயல்பட்டதால், ஈவு இரக்கமற்ற இந்த 'மனித மிருகங்கள்' சிக்கியுள்ளனர்.


