“தினமும் இப்படித்தான் நடக்குது… என்னால முடியல!” – மனைவியின் கொடூரத்தை வெளிச்சம் போட்ட ரகசிய கேமரா;
இணையத்தில் வைரலான கணவனின் கண்ணீர் வீடியோ
மனைவியால் தொடர்ச்சியாக உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைகளை அனுபவித்து வந்த கணவர் ஒருவர், அந்த கொடூரங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வீட்டில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில், கணவர் மீது மனைவி மேற்கொண்டதாகக் கூறப்படும் கடுமையான வன்முறைகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், மனைவியால் கணவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களில் சட்டப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்ற ஆதங்கத்தையும் பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
