உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், கணவனை இழந்து தனியாக மக்களை வளர்த்து வந்த தாயின் உலகமே நேற்று உடைந்து விழுந்தது. அந்தத் தாயின் பெயர் சுமித்ரா தேவி.
அவரது ஒரே மகள் ப்ரியா (வயது 19). பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ப்ரியா, நேற்று மாலை வீட்டை விட்டு கிளம்பினாள். இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பயந்து போன சுமித்ரா தேவி உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
“என் மகள் எங்கே போனாள் என்றே தெரியவில்லை. அவள் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது” என்று கதறினார் சுமித்ரா.
மறுநாள் காலை, ப்ரியா வீட்டுக்கு வந்தாள். ஆனால் அவள் நிலை பரிதாபமாக இருந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்தாள். உடல் முழுவதும் வியர்வை. கூடுதல் உதிரப்போக்கு. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே பிரியா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமித்ரா தேவி கதறியபடி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். "என் மகளுக்கு காதலன் ராகுல் சிங் விஷம் கொடுத்திருக்கிறான். நேற்று முழுவதும் அவனிடம் தான் இருந்தாள். அவள் செல்போனில் இருந்த புகைப்படங்கள் அதை உறுதி செய்கின்றன. அவன் தான் என் மகளை கொன்றுவிட்டான்!"
காவல்துறை உடனடியாக ராகுல் சிங்கை கைது செய்து விசாரணை செய்தது. முதலில் ராகுல் பொய் சொன்னான். “எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் பல பேருடன் தொடர்பில் இருந்தாள்” என்று கூறினான்.
ஆனால் ஹோட்டல் சிசிடிவி காட்சிகள், செல்போன் லொகேஷன் மற்றும் ப்ரியாவின் செல்போனில் இருந்த செய்திகள் அனைத்தும் உண்மையை வெளிக்கொண்டு வந்தன.
உண்மை என்ன?
நேற்று மாலை ப்ரியாவும் ராகுலும் ஒரு ஹோட்டல் அறையை அரை புக் செய்து இரவு முழுவதும் தங்கினர். அந்த இரவில் ராகுல் ப்ரியாவுடன் பலமுறை உடலுறவு கொண்டான். ப்ரியா அவனிடம், “நீ என்னை மட்டும் தான் காதலிக்க வேண்டும். வேறு பெண்களுடன் தொடர்பை விட்டுவிடு” என்று கெஞ்சினாள். இது ராகுலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. வாக்குவாதம் முற்றியது.
அதன் உச்சமாக, ராகுல் ப்ரியாவின் மர்ம உறுப்புப் பகுதியில் காலால் ஓங்கி உதைத்தான். கடுமையான வலியால் துடித்த ப்ரியா, அதிகாலையில் அழுதபடி ஹோட்டலில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தாள். ஆனால் வலி தாங்க முடியாமல் வீட்டில் சுருண்டு விழுந்தாள்.
போஸ்ட்மார்ட்டம் அறிக்கை உண்மையை உறுதிப்படுத்தியது. ப்ரியாவின் மர்ம உறுப்புப் பகுதியில் காயங்கள், வீக்கம் மற்றும் உதைக்கப்பட்ட அடையாளங்கள் தெளிவாகத் தெரிந்தன. கூடுதல் உதிரப்போக்கு மற்றும் உள் காயம் காரணமாகவே அவள் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை தீவிர விசாரணையில் ராகுல் சிங் பல இளம்பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. “காதல்” என்ற பெயரில் அவன் பலரை ஏமாற்றி வந்திருக்கிறான் என்பதும் வெளியானது.
தற்போது ராகுல் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழிக்க முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமித்ரா தேவி இன்று காவல் நிலைய வாசலில் கண்ணீர் வடித்தபடி கூறினார்: “என் கணவரை இழந்து ஒரே மகளைத் தான் வளர்த்தேன். அவளும் என்னைவிட்டுப் போய்விட்டாள். காதல் என்ற பெயரில் என் மகள் நாசம் செய்த அந்த பச்சோந்தி இப்போது சிறையில் இருக்கிறாள்.
இன்றைய பள்ளி, கல்லூரி படிக்கும் இளம்பெண்கள் தங்கள் “காதலர்கள்” என்று நம்பி ஹோட்டல் செல்வது, உடலுறவில் ஈடுபடுவது ஆகியவை பெருகி வருகின்றன. சில சமயங்களில் இத்தகைய நம்பிக்கை அவர்களின் உயிரையே பறிக்கிறது. இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
காதல் என்ற பெயரில் நம்பிக்கை வைக்கும் முன்… ஒரு முறை யோசியுங்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி...
