காமம் தலைக்கேறிய மனைவி! ஆணுறுப்பில் ஏற்பட்ட காயம்! விசித்திர உடலுறவால் நடந்த அசிங்கம்! திடுக்கிட்ட போலீஸ்!

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு அமைதியான கிராமப்புற பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் காவல்துறையினரையே உலுக்கி உள்ளது.
ஒரு பெண் தனது கள்ளக்காதலர்களுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவர்களே தனது கணவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாக சந்தேகம், இருவரையும் மதுவுடன் அதிக அளவு வயாகரா மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மனைவியின் பெயர் மீனா பட்னாய்க் (வயது 32). அவரது கணவர் அருண் குமார் பட்நாய்க் (வயது 38) ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். திருமணமான பிறகு மீனாவுக்கு இரண்டு கள்ளக்காதலர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் பெயர்கள் ரவி பெஹெரா (வயது 35) மற்றும் மனோஜ் நாயக் (வயது 34). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த சில மாதங்களாக அருண் குமார் அலுவலகத்திற்கு சென்ற பிறகு, மீனா தனது வீட்டுக்கே இரு கள்ளக்காதலர்களையும் அழைத்து உல்லாசமாக இருந்து வந்தார். ஒரு நாள், இரு ஆண்களில் ஒருவர் அருண் குமாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மீனா ஆடையின்றி இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. மனம் உடைந்த அருண் குமார், அருகில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அருண் குமார் இறந்து இரண்டு மாதம் கழித்து, அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் “என் மனைவியின் தகாத உறவுகள்தான் என்னை இந்த முடிவுக்கு தள்ளியது. வேறு யாரும் காரணமல்ல” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
கணவரின் மரணத்துக்குப் பிறகு மீனா எங்கே என்று போலீஸார் தேடினர். அப்போதுதான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இரு கள்ளக்காதலர்களான ரவி பெஹெரா மற்றும் மனோஜ் நாயக் இருவரும் ஒரு தனி வீட்டில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலியால் இறந்தனர். தொடர்ந்து மீனாவை தேடிய போலீசார், அவர் தனது தோழி வீட்டுக்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து, ஒன்றும் தெரியாதது போல் வாழ்ந்து வந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் மீனா முதலில் பல முரண்பாடான தகவல்களை கூறினார். பின்னர் உடைந்து போய் உண்மையை ஒப்புக்கொண்டார். “நான் இருவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்தேன்.என் கணவருக்கு யார் வீடியோ அனுப்பப்பட்டது என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.ரவியுடன் உல்லாசமாக இருந்தபோது அவரது ஆணுறுப்பை நான் கடித்தேன்.
அவருக்கு காயம் ஏற்பட்டது. அதை மீறி உறவு கொள்ள வேண்டும் என்றார். நான் அவரது ஆண்மையை கேலி செய்தேன். அதனால் தான் அவர் என் கணவருக்கு புகைப்படங்கள் அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தேன். மனோஜுடன் பலமுறை சண்டை போட்டிருக்கிறேன். அவரிடம் பணம் வாங்கி திருப்பி தராமல் இருந்தேன். இருவருமே என் கணவருக்கு வீடியோ அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. எனவே பழிவாங்க முடிவு செய்தேன்” என்று மீனா கூறினார். மீனா திட்டமிட்டபடி, இரு கள்ளக்காதலர்களையும் ஒரு தனிமையான வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மதுவுக்கு அதிக அளவு வயாகரா மாத்திரைகளை கலந்து கொடுத்து உடலுறவில் ஈடுபட்டார். இருவரும் மூச்சு திணறி, நெஞ்சு வலியால் உயிரிழந்தனர். உடல்களை அப்படியே அந்த வீட்டில் விட்டுவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடினார்.
அந்த வீடு ஆளரவமற்ற தனி இடத்தில் இருந்ததால், சுற்றுப்புறத்தில் யாருக்கும் தெரியவில்லை. காவலர்கள் “எதற்காக உங்களுடன் இருந்தவர்களையே கொலை செய்ய வேண்டும்?” என்று கேட்டபோது, மீனா கணவருக்கு வீடியோ அனுப்பிய சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் காரணம்” என்று கூறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மீனா பட்நாய்க் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு வருகிறது. இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post