மாராப்பை சரியவிட்டு.. இந்த வயதிலும் திணறடிக்கும் ரேஷ்மா..!
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர், தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் அவர். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.
அதன் பின் நடிப்பில் கவனம் செலுத்தி இவர், 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படமான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ரேஷ்மா நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவரை பற்றித்தான் பேசி இருப்பார்கள். ரேஷ்மாவுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
